சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்

சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்
சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்

நாமக்கல் அருகே 17 வயதுச் சிறுமியின் 8 மாதக் கருவை கலைக்க குடும்பத்தினர் செய்த முயற்சியில் சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே தாயில்லாமல் தந்தை, சகோதரருடன் வசித்து வந்த இந்தச் சிறுமி, 9 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். குடும்ப வறுமைக்காக கூலிவேலை செய்து வந்த சிறுமிக்கு, சங்கர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் கருத்தரித்த சிறுமி, தந்தைக்கும், சகோதருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டதாகக் தெரிகிறது. இந்நிலையில் 8 மாதக் கருவை சுமந்துகொண்டிருந்த சிறுமியின் கருவை கலைக்கும் முயற்சியில் தந்தையும், சகோதரனும் கருக்கலைப்பு மாத்திரை வாங்கித் தந்ததாக தெரிகிறது. 

இதனால், சிறுமியின் 8 மாதக் கரு கலைந்து ரத்தப்போக்குடன் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com