சென்னை, மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் தூங்கியவர், தூக்கத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த ஏரிக்கரை உள்ளகரம்-புழுவாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் மயிலாப்பூர் பாலகிருஷ்ணா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். இரவு தூங்கும் போது புழுக்கமாக இருந்ததால், காற்று வாங்கிக்கொண்டே தூங்குவதற்காக 3வது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி தூங்கியுள்ளார்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது உருண்ட அவர், அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அவர் விழுந்தது பலத்த சத்தமாக
கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, பலத்தகாயத்துடன் கிடந்த முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, அதிகாலையில் உயிரிழந்தார். இருப்பினும் மரணம் காரணங்களின் பின்னணி குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!