
ஜல்லிகட்டு போராட்டத்தில் இணைந்த இளைஞர்கள் ஆர்.கே நகரில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
‘’என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியை துவக்கி மாவட்டம் வாரியாக சென்று உறுப்பினர்களை இளைஞர்கள் சேர்த்து வருகின்றனர். ஆர்.கே. நகரில் போட்டியிட இதுவரை 70 பேரிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் 10 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் மூலம் தேர்வு செய்வார்கள் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.