திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கொள்ளையடித்தவர்களை தேடி தனிப்படை போலீஸ் நெல்லை விரைந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி மன்னார்குடி அருகே அசேஷம் என்னுமிடத்தில் உள்ள மெர்க்கண்டைல் வங்கிக்குள் நுழைந்த 5 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்று விட்டதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கொள்ளை தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கொள்ளை தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி காவல்நிலையத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் நெல்லை விரைந்துள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!