குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்யாறு அருகே புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேகமாக பரவியது. அந்த வீடியோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டாரத்தில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும்,பெற்றோர்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும்படியும் அவர் பேசி இருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவால் உருவான வதந்தியின் காரணமாகவே மூதாட்டி ருக்மணி உட்பட 5 பேர் மீது பொதுமக்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூதாட்டி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைதகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வாட்ஸ் அப் வதந்தியை பரப்பியவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பியதாக வீரராகவனை அனக்காவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!