ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் 7 பேரை, அரசு ஊழியர்கள் என நினைத்து தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் மாகாணத்தின் மின்நிலையம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மின் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பஸ் மூலம் மின்நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்த பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநருடன் கடத்திச் சென்றனர்.
இதுபற்றி, பாக்லான் மாகாண கவர்னர் அப்துலாஹி நேமதி கூறும்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி, டேண்ட் ஏ சகாபுதீன் பகுதியில் வைத்துள்ளனர் என்றும் உள்ளூர் மக்கள் மூலம் அவர்களிடம் அதிகாரிகள் பேசியதாகவும் அரசு ஊழியர்கள் என நினைத்து தவறுதலாக கடத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பழங்குடி இன தலைவர்களை கொண்டு தலீபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்