நாமக்கல்லை சேர்ந்த ஓட்டுநரின் மகனான மாணவர் நீட் தேர்வு எழுத பணமின்றி சிரமப்பட்டு, பின்னர் தாமதமாக சென்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார். இவரது மகனான கௌதம், புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வுக்காக தயாராகி வந்த கௌதமிற்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியில்லாத ஏழை மாணவரான கௌதம், எர்ணாகுளம் செல்ல பணம் இல்லாததால் பல பேரிடம் உதவி கேட்டுள்ளார்.
இருப்பினும் போதிய பணம் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு புறப்பட முடியாத மன வேதனையில் இருந்த கௌதமிற்கு, சேலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன்வந்துள்ளது. கௌதமின் செலவுகளை ஏற்பதாக அந்நிறுவனம் கூறியதையடுத்து, அவர் அவசரமாக இன்று காலை கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார். உரிய நேரத்தில் கேரளா சென்று சேர்ந்து, நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அந்த மாணவர் கேரளா சென்றுள்ளார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்