இளம் பெண்ணைக் கொன்று டிரங் பெட்டிக்குள் அடைத்து வைத்து வீசிச்சென்றுள்ள சம்பவம் மும்பை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ளது, வாஷி. இங்குள்ள கோவன் பகுதியில், ஓடை ஒன்றின் அருகே டிரங்க் பெட்டி ஒன்று கிடப்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்றுப் பார்த்துள்ளனர். அதில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அந்த டிரங்கு பெட்டியை திறந்து பார்த்தனர். உள்ளே, ஒரு பெண்ணின் உடல் அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெட்டியில் 15-க்கும் அதிகமான புடவைகளும் இருந்துள்ளன. அந்தப் பெண் வளையல், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளையும் அணிந்துள்ளார். அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்தப் பெண் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?