எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
11 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தான் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வழக்கின் தன்மையை பொறுத்து முழு மனதுடன் விசாரித்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பளிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துக் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கருத்து கூறியிருந்த நிலையில் அவர் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையிட்டதை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால் கோடை விடுமுறைக்குப்பின் விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Loading More post
உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix