ஆசஸ் சென்ஃபோன் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபொன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன. வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.
அந்த வகையில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆசஸ் சென்ஃபோன் நிறுவனம், மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலைக்கு ஏற்ப மூன்று நிலைகளில் வெளியாகியுள்ளது.
முதல் நிலை : விலை ரூ.10,999
ரேம் : 3 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 32 ஜிபி
ஆண்ட்ராய்டு : 8.1 ஓரியோ
கேமரா : பின்புறம் - 13 எம்பி மற்றும் 5 எம்பி (இரட்டைக்கேமரா), முன்புறம் - 8 எம்பி
பேட்டரி திறன் : 5000 எம்ஏஎச்
இரண்டாம் நிலை : விலை ரூ.12,999
ரேம் : 4 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கூடுதலாக 2 டிபீ வரை மைக்ரோ கார்டு பொறுத்திக்கொள்ளமுடியும்.
மற்ற சிறப்பம்சங்கள் அனைத்து முதல் நிலையில் உள்ளதுதான்.
மூன்றாம் நிலை : விலை ரூ.14,999
ரேம் : 6 ஜிபி
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கூடுதலாக 2 டிபீ வரை மைக்ரோ கார்டு பொறுத்திக்கொள்ளமுடியும்.
கேமரா : பின்புறம் - 16 எம்பி மற்றும் 5 எம்பி (இரட்டைக்கேமரா), முன்புறம் - 16 எம்பி
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்