பிரிந்து வாழும் தனது மனைவியை சந்திக்க விடாமல் தடுத்த மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லியை சேர்ந்தவர் நீரஜ் (27). இவர் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராகி (25) என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் ஆன நாள் முதலே இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் கைக்கலப்பாகவும் மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தனது கணவர் மீது ராகி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவியை தன்னுடன் வருமாறு நீரஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து தொலைபேசியில் பேசிய நீரஜ் தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் அவரது தொலைபேசி அழைப்புகளை ராகி ஏற்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த நீரஜ் கத்தியுடன் டெல்லி ஷாஷி கார்டனில் அமைந்துள்ள தனது மாமனார் வீட்டிற்கு நேற்று மதியம் சென்றுள்ளார். அங்கிருந்த அவரது மாமனார் தனது மகளை சந்திக்க விடாமல் தடுத்துள்ளார். இருவருக்குமிடையே காரசார விவாதம் நடைப்பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நீரஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மாமனாரை சரமாரியாகக் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கபட்டது. தப்பிய ஓடிய நீரஜை காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!