ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கியவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் உப்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும் ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கோப்பேரி மடம் பகுதியில் அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆனந்த் முதலுதவிக்காக தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
Loading More post
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!