சென்னையை அடுத்த மறைமலை நகரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மகிந்திரா சிட்டி அருகேயுள்ள அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஊருக்கு அருகே சாலையில் வலதுபுறம் திரும்பியபோது, மரக்காணத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லாவண்யா மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயி்ரிழந்தார். அவரது கணவர் புருஷோத்தமன் காயங்களின்றி தப்பினார். தகவலறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழப்புக்குக் காரணமான பேருந்து மீது கல்வீசித் தாக்கினர்.
அங்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மறியலில் ஈடுபட்டவர்ககளை கலைந்து போகுமாறு கூறினார். அப்போது பொதுமக்கள் கல்வீசித் தாக்கியதில், காவல் கண்காணிப்பாளர் ஹதிமானி உள்ளிட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி - சென்னை தேதிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கல்வீச்சு தொடர்பாக மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்