இன்டர்நெட் வசதி புதிதல்ல.. மஹாபாரத காலத்திலேயே இருந்த ஒன்றுதான் என திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வராக பிப்லாப் குமார் தேப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அகர்தலாவில் கணினிமயமாக்கம் மற்றும் சீர்திருத்தம் குறித்து பேசிய பிப்லாப் குமார், இன்டர்நெட் வசதி புதிதல்ல. மஹாபாரத காலத்திலேயே இருந்த ஒன்றுதான் என தெரிவித்தார். குருஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதுகுறித்த ஒவ்வொரு அத்தியாயத்தையும் சஞ்சய், திரிதராஷ்ட்ரரிடம் விவரிப்பார். இது அப்போதே இன்டர்நெட் வசதி இருந்தை காட்டுகிறது. இன்டர்நெட் மட்டுமில்ல.. செயற்கைக்கோள் வசதியும் அப்போது இருந்திருக்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், “ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தற்போது தேசிய தகவல் மையத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர வேறு ஒன்றுமில்லை. ஐரோப்பிய நாடுகள் கூட தாங்கள்தான் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாக கூறுகின்றன, ஆனால் உண்மையில் தொழில்நுட்பம் நம்முடையது. நமது பொறியாளர்களில் பலரும் அமெரிக்கா உள்பட பலநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். கலாச்சாரத்தில் நம் நாடு எப்போதுமே செழிப்பாகத்தான் உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இணையதள சேவை வழங்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றியும் பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?