காரைக்குடி அருகே ஆசிரியர் ஒருவர் மது அருந்தி வகுப்பறையில் மயங்கி கிடந்த அவலம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் திருபுவனம் அருகே பூவந்தி அரசு உயர் நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வெளியே சென்று வந்த அவர், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு பள்ளி அறையில் விழுந்து கிடந்துள்ளார். இதுபற்றி சக ஆசிரியர்கள் கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சனா இருதயராஜ் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். போதை தெளியாத நிலையில் இருந்த ரஜினிகாந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக ஆசிரியர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட கல்வி அதிகாரி, மேல் அதிகாரிகளிடம் சமர்பித்து ஆசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்