திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் தனது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது, நாள்தோறும் திருடு போவதால் ஆத்திரமடைந்த ஒருவர், திருடிய நபரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கோட்டைபட்டியைச் சேர்ந்த தீபன் என்பவர் திருச்சி எல்லையில் துவரங்குறிச்சியில் தனது தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதை அறிந்த சிலர், அங்கிருந்து மது பாட்டில்களை நாள்தோறும் திருடி அருந்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீபன், விஷம் கலந்த மதுவை தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளார். இதை அறியாத சின்னழகு என்பவர், வழக்கம்போல் அதைத் திருடி வீட்டில் சென்று குடித்துள்ளார். அதை குடிக்கும்போதே வாயில் நுரை தள்ளி சின்னழகு பரிதாபமாக உயிரிழந்தார். சாகும் தருணத்தில், தீபனின் தோட்டத்தில் இருந்து மதுவை திருடி அருந்தியதை சின்னழகு தெரிவித்துள்ளார். இதன்பேரில், காவல்துறையினர் தீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix