பள்ளி இறுதி தேர்வின் போது மாணவனுக்கு நிகழ்ந்‌த சோகம்

பள்ளி இறுதி தேர்வின் போது மாணவனுக்கு நிகழ்ந்‌த சோகம்
பள்ளி இறுதி தேர்வின் போது மாணவனுக்கு நிகழ்ந்‌த சோகம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனை குத்திக் கொலை செய்ய முன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டூரைச் சேர்ந்த ஷேக் சமீருதீன் என்ற மாணவன் கோவூரிலுள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வு ‌நடைபெற்று வரும் நிலையில் இன்று கணினி அறிவியல் தேர்வு முடிந்து வெளியே வந்த ஷேக் சமீருதீனை‌, ‌அவரது வகுப்பில் பயின்றுவந்த மற்றொரு மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மாணவர்களை அழைத்து செல்ல வந்த பெற்றோர் சமீருதீனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் மாணவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது. இன்று இறுதி தேர்வு என்பதால் ‌சமீருதீனை கொலை செய்யும் நோக்கோடு அந்த மாணவன் வந்ததும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com