பல்வேறு கோரிக்கை, பல்வேறு கட்சிகள்; சோனியா தலைமையில் போராட்டம்

பல்வேறு கோரிக்கை, பல்வேறு கட்சிகள்; சோனியா தலைமையில் போராட்டம்
பல்வேறு கோரிக்கை, பல்வேறு கட்சிகள்; சோனியா தலைமையில் போராட்டம்

பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வங்கி மோசடிகள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பலவீனம் போன்ற பிரச்சனைகளை சுட்டிகாட்டும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பல்வேறு பதாகைகளுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பதாகையுடனும், அதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கும் கோரிக்கை பதாகையுடன் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவரவர் மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com