சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகர பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை மெரினா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகர பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் மாநகரப் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வேப்பேரியிலும் 2 மாநகர பேருந்து மீது கல்வீசப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் பாரிமுனையில் இருந்து தரமணி நோக்கி ராயப்பேட்டை வழியாக சென்ற மாநகரப் பேருந்து மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுக போராட்டம் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆதிமனிதர்கள் தான் கல்லை பயன்படுத்தினார்கள், திமுக ஆதி காலத்திற்கு திரும்பி விட்டதா? என கேள்வி எழுப்பினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!