பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராபால் (RABAUL) நகருக்கு அருகில் நியூ பிரிட்டன் தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அலைகள் வழக்கத்தை விட சுமார் ஒரு மீட்டர் வரை அதிகமாக மேலெழும்ப வாய்ப்புள்ளதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதனை அடுத்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமோன் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்