
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலராக பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலராக பத்மஜா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களாக சேகர், மதன்பிரபு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இந்த அறிவிப்புளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை சுதந்திரமாக, நியாயமாக நடத்திட கட்சிகள், மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.