ஆம்பூர் அருகே தந்தை இறந்த நிலையில், மகள் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த செல்வம், பாந்தாரப்பள்ளியைச் சேர்ந்த கோதண்டன், பன்னீர்குட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மூவரும் கம்பெனியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.
இதில் ரங்கநாதன் என்பவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா, தனது தந்தையின் மரணத்தால் மிகவும் மனக்கவலை அடைந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த நிலையில், கனத்த இதயத்துடனும், கண்ணீருடனும் ஸ்வேதா பத்தாம் வகுப்பு தேர்வை இன்று எழுதினார். துக்கத்திலும் தளர்ந்து போகாமல் மன உறுதியுடன் தேர்வெழுதிய அந்த மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன. இருப்பினும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்