தமிழக மக்கள் நோயில்லாமல் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளை முதலமைச்சர் வழங்கினார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவைச் சாப்பிடுவதற்காக மாதந்தோறும் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கூறிய அவர், பல்வேறு பகுதிகளுக்குச் நேரடியாக சென்று மக்களுக்கு காசநோய் உள்ளதா எனக் கண்டறியும், கருவிகள் அடங்கிய வாகனங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழக மக்கள் நோயில்லாமல் வாழ அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், 2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்