தண்ணீரின்றி தவிக்கும் கோடை காலத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சுமார் 60 லட்சம் லிட்டர் வீணாக்கப்பட இருப்பதால் போட்டியை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள ஜனதா காலனியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஹைதர் அலி. இவர், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘ஐபிஎல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்குகிறது. ஒன்பது மாநிலங்களில், 51 இடங்களில் 60 போட்டிகள் நடக்கிறது. இதையொட்டி மைதான பராமரிப்பு, பிட்ச் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, சுமார் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. தண்ணீரின்றி மக்கள் தவிக்கும் கோடை காலத்தில், இவ்வளவு தண்ணீர் வீணாவதோடு நிலத்தடி நீர்மட்டமும் குறையும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தப் போட்டியை நம் நாட்டுக்கு வெளியே நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டியை நடத்தும் 9 மாநிலங்கள் ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதன் அடுத்த விசாரணை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!