தேனி மாவட்டம் குரங்கணியில் தீயில் உயிரிழந்தவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டருடன் ஆசிரியர் பயிற்சி மாணவியர் செல்ஃபி எடுத்துக்கொண்டது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதவிர பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு முழுக்க தீயில் சிக்கி துடித்த அவர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட ஆசியர் பயிற்சி மாணவியர் அங்கிருந்த ஹெலிகாப்டரை நோக்கி வரிசையாகச் சென்றனர். பின்னர் படபடவென ஹெலிகாப்டரின் அருகில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்கத் துவங்கினர். சில மாணவியர் தனிப்படமும், சில மாணவியர்கள் தோழிகளுடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு சிலரோ ஆசிரியர்களோடு நின்று செல்ஃபி எடுத்து சந்தோஷம் கொண்டனர்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு உதவ செல்கிறார்கள் என கூடியிருந்தோர் கருதிய நிலையில் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. உயிருக்கு போராடியவர்களை மீட்கவந்த ஹெலிகாப்டர் அருகே நின்று மாணவியர் செல்பி எடுத்ததை பார்த்த பொதுமக்களும் மிகவும் எரிச்சலடைந்தனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்