குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி தவித்தவர்களில் இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 21 பேரை மீட்கும் பணி விடியவிடிய நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதைத்தொடர்ந்து அவர்களை மீட்க கமாண்டோக்களை அனுப்பி வைத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உடனடி நடவடிக்கையாக மலைப் பகுதியில் இருப்பவர்களை கண்டறிவதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் உள்ளூர் மக்கள் நேரத்தை வீணடிக்காமல் காயமடைந்தவர்களை தோளில் சுமந்தபடி அடிவாரத்துக்கு அழைத்து வந்தனர். அந்த வகையில் 15 பேர் மலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையை சேர்ந்த மோனிஷா, தனபால், விஜயலட்சுமி, சஹானா, நிவேதா, பூஜா, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, நேகா, பிரபு உள்ளிட்ட 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
99 சதவிகித தீக்காயம் அடைந்த அனுவித்யா, 40 சதவிகித காயமடைந்த கண்ணன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலக்கியா, சபிதா, சுவேதா ஆகியோர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்