தன் உயிரை பொருட்படுத்தாமல் கடலில் அடித்து செல்லப்பட்டவரை காப்பாற்றிய மீனவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக விழாவின்போது, கடலில் குளித்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த ஞானவேல் என்பவர் அலையில் அடித்து செல்லப்பட்டார். இவரை காப்பற்ற முயன்ற கடலோர காவல்படையினர் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் முயற்சியை பாதியில் கைவிட்டனர்.
இதனை கேள்விப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர், உயிரையும் பொருட்படுத்தாது கடலில் குதித்துள்ளார். அத்துடன் ராட்சத அலையில் சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த ஞானவேல் என்பவரை தலைமுடியை பிடித்து, ராட்ஷச அலையில் போராடி நீந்தி கரைக்குக்கொண்டு வந்தார். கரையில் இருந்த காவல்துறையினர் அதன்பின் அவரை மீட்டு முதலுதவி செய்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த அனைவரும் கண்டு வியந்தனர். மேலும் உயிரைக் பணயம் வைத்து காப்பாற்றிய மீனவரை பாராட்டி வருகின்றனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!