மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உலகத்தரம் வாய்ந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றார். மாநில அரசின் கோரிக்கையை ஏற்றே எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், அவர்கள் அளித்த அறிக்கை, சென்னை அப்போலோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, தனிப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிடக்கூடாது எனினும், ஜெயலலிதா மறைவு குறித்து வதந்திகள் பரப்பப்படுவதால் சிகிச்சை விபரங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி