2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்ததலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அங்கு பரப்புரை மேற்கொள்வேன் என ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் படேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருபவர் ஹர்த்திக் பட்டேல். பதிதார் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்த்திக் பட்டேல், மம்தா பானர்ஜி தன்னை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வேன் என்றும் கூறினார். மேலும் வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளேன் என்றும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மம்தா பானர்ஜியும், ஹர்த்திக் பட்டேலை வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஹர்த்திக் பட்டேல் தன் இளைய சகோதரர் போன்றவர் என கூறியுள்ள மம்தா பானர்ஜி, அவருக்கு அரசியலில் நுண்ணறிவு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் ஹர்த்திக் பட்டேல் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானவர் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்