அசாம் மாநிலம் கவுகாத்தில் 1,950 கோடி செலவில் இரட்டை கோபுர வர்த்தக மையம் அமைய உள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த வெள்ளிக் கிழமையன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால், அசாம் மாநிலத்தில் அமையவுள்ள வர்த்தக மையத்தால் புதிய ஊக்கத்தை அளிப்பதாகவும், மேலும் பொருளாதார நாடுகளை விட இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைய தூண்டுகோலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக அசாம் மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. ரூ.1,950 கோடி செலவில் 65 மாடிகளை கொண்டதாக கட்டப்படவுள்ளது. வர்த்தக மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள், ஷாப்பிங் மால்கள் அடுக்குமாடி குடியிருப்பு, 4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'