தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 அல்லது அக்டோபர் 2-ம் தேதி அமலாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி பேருக்கு முழுமையான சுகாதார பாதுகாப்பு அளிக்கும் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 12ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் தொகை தேவைப்படுகிறது. இதன்படி குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரீமியத்தில் 60 சதவிகிதம் தொகையை மத்திய அரசும், 40 சதவிகித தொகையை மாநில அரசுகளும் செலுத்தும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சதவிகிதம் சுகாதார வரி காரணமாக 11ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!