நெடுவாசலில் போராடிவரும் போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியரை இன்று மீண்டும் சந்திக்க உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுவாசலை அடுத்த புல்லான் விடுதியில் போராட்டக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவரை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியரிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோர இருப்பதாகக் கூறினார். ஆட்சியர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால், போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்