
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நேற்றும் நேற்று முன் தினமும் நடந்தது. இந்த ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 169 வீரர்கள் விலை போனார்கள். இவர்களுக்காக 8 அணிகளும் சேர்ந்து செலவு செய்த தொகை, ரூ.431 கோடியே 70 லட்சம். தக்கவைக்கப்பட்ட 18 வீரர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் 187 வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தக்க வைத்துக் கொண்ட வீரர்களுடன் ஏலத்திலும் பல வீரர்களை எடுத்தனர். தமிழக வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தோனி கூறியிருந்தார். ஆனால், கோவையை சேர்ந்த ஜெகதீசன் நாராயண், முரளி விஜய் ஆகிய தமிழக வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:
1. மகேந்திர சிங் தோனி
2. அம்பதி ராயுடு
3. சாம் பில்லிங்ஸ்
4. என். ஜெகதீசன்
5. முரளி விஜய்
6. டு பிளிசிஸ்
7. சுரேஷ் ரெய்னா
8. ஜடேஜா
9. கேதார் ஜாதவ்
10. வெய்ன் பிராவோ
11. ஷேன் வாட்சன்
12. கனிஷ்க் சேத்
13. த்ருவ் ஷோரே
14. சைத்தான்யா பிஷ்னாய்
15. தீபக் சாஹர்
16. மிட்செல் சான்ட்னெர்
17. சிட்டிஸ் ஷர்மா
18. கரண் சர்மா
19. ஷர்துல் தாகூர்
20. ஹர்பஜன் சிங்
21. மார்க் வுட்
22. இம்ரான் தாஹிர்
23. லுங்கி நிகிடி
24. கேஎம் ஆசிஃப்
25. மோனு சிங்