தமிழகத்தில் ஏற்கெனவே கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளத்துப்பாக்கி கடத்தலில் ஈடுபட்டு கைதான இருவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் துப்பாக்கிகள் கடத்தி வரப்படுவதை உறுதி செய்து கொண்ட காவலர்கள், அதில் ஏறி ஆய்வு செய்தனர். திருவொற்றியூர் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, இரண்டு பேர் ரயிலில் இருந்து குதித்து ஓடினர். சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர். அதனால் காவலர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், திருமங்கலத்தைச் சேர்ந்த கமல் என்பது தெரியவந்தது. இவர்களுக்கும், கள்ளநோட்டு வழக்கில் ஏற்கனவே கைதாகி புழல் சிறையில் உள்ள முகமுது ரஃபீக் என்பருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இருவரிடம் இருந்து 5 கள்ளத் துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அவர்களின் வீட்டில் இருந்தும் ஒரு கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைதான பிரதீப், கமல் இதற்கு முன்பே மேற்குவங்கம் சென்று 5 கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி வந்து விற்றிருப்பதும்,10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கிகள் வாங்கியவர்கள் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்