நடிகர் தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று அவர் நேரில் ஆஜரானார். அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கோரி கதிரேசன் தம்பதியர் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்களில் குளறுபடிகள் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!