நோயை குணமாக்குவதாகக் கூறி, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 குழந்தைகள். கடந்த 2008-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கணவர், உமாவின் அம்மா வீட்டில் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். குழந்தைகளும் அவரைப் பார்க்க வருவதில்லை. தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், உமாவின் உறவினர் மூலம் ஹதராலி ஷேக் என்பவர் இரண்டு வருடத்துக்கு முன் அறிமுகமானார். இவர் அப்பகுதியில் உள்ள சாமியாராம்.
உடல்நிலையை குணப்படுத்துகிறேன் என்று உமாவிடம் வாக்குக் கொடுத்த சாமியார், ஒரு நாள் தீர்த்தம் என்று திரவம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். குடித்த உமா, மயக்கமடைந்துவிட்டார். இதைப் பயன்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சாமியார். மயக்கம் தெளித்த உமா, தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அவரிடம் நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதாகவும் வெளியே யாரிடமாவது சொன்னால், அதை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பயந்து போன உமா, யாரிடமும் இதைச் சொல்லவில்லை.
இப்படி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் சாமியார். பிறகு அவரிடம் இந்து 300 கிராம் தங்க நகைகளை அபகரித்துள்ளார். பிறகுதான், தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தார் உமா. போலீசில் புகார் கொடுக்கச் சென்றவரை மறித்து, ’நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று உறுதி கூறியிருக்கிறார் சாமியார். ஆனால் அவர் சொன்னதை செய்யவில்லை. இதையடுத்து சதாரா போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார் உமா. போலீசார் சாமியாரை கைது விசாரித்து வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?