மகர சங்கராந்தி திருவிழா அன்று தனக்கு பிடித்த உணவான ‘தஹி சுரா’வை உண்ண வேண்டும் என லாலு பிரசாத் அனுமதி கோரியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. தண்டனை காரணமாக லாலு பிரசாத் சிறை செல்வது, இது 8வது முறையாகும்.
இந்நிலையில் எந்த முறை அவர் சிறை சென்ற போதிலும் இல்லாத கட்டுப்பாடுகள் இந்த முறை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று பேர் லாலுவை சந்திக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தன்னை காண கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற லாலுவின் கோரிக்கையும் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் ஞாயிற்றுக்கிழமை மகர சங்கராந்தி திருவிழா வருவதால் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடவும், தனக்கு பிடித்த ‘தஹி சுரா’ என்ற உணவு வகையை உண்ணவும் அனுமதி வழங்க வேண்டும் என லாலு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, பிரம்மாண்டமாக பண்டிகையை கொண்டாட அனுமதி வழக்கப்படாது என்றும் ஆனால் கண்டிப்பாக சிறைக்குள் கொண்டாட அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதி உறுதியளித்தார். மேலும் ‘தஹி சுரா’ உணவும் சிறைக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!