மரண தண்டனையை எப்படியெல்லாம் நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பல்வேறு நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக மின்சாரம் பாய்ச்சுதல், சுடுதல், விஷ ஊசி போடுதல் உள்ளிட்ட முறைகள் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஒருவர் கண்ணியத்துடன் உயிரிழப்பு என்பது அடிப்படை உரிமையில் ஒன்று. தற்போது நடைமுறையில் உள்ள தூக்கிலிடும் முறை அதிக வலியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. இதனால், தூக்குத் தண்டனைக்கு மாற்று முறையை கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் முறையில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை உள்ளதா? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், மரண தண்டனை மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix