கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும், இணையதள வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சுமார் 300 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், நாகை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தாராபுரம், நெல்லை, மதுரை என தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 10ம் தேதி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிடும் போராட்டமும் , 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!