மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, தமிழக திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை இன்று சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அதன்படி மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதலில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இனயம் துறைமுகத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரவாயல் - துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். திட்டத்தை விரைந்து செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் 800 கி.மீ. சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்தவும் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்