மணிப்பூர் பெண் போராளி இரோம் ஷர்மிளா, மாநில அரசால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்க மறுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இரோம் ஷர்மிளாவுக்கு 6 காவல் துறையினர் கொண்ட குழுவைப் பாதுகாப்பு பணிக்காக மாநில அரசு அனுப்பியது. எனினும் இரோம் ஷர்மிளா அதனை ஏற்க மறுத்துள்ளார்.
தான் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புவதாகவும், பாதுகாப்புக்காக காவல்துறையினர் உடன் செல்லும் விஐபி நடைமுறை தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மணிப்பூர் சட்டமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!