கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினாலும், அவர் தான் என்றும் தமது கேப்டன் என விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக மகேந்திரசிங் தோனி கடந்த 4-ம் தேதி அறிவித்தார். இவர் தலைமையிலான இந்திய அணி இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 110 போட்டியில் வெற்றியும், 74 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. அதேபோல் 72 டி20 போட்டிகளில் இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 41 போட்டிகளில் வென்று 28-ல் தோற்றுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தோனியின் முடிவு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி ‘இளம் வீரர்கள் விரும்பும் கேப்டனாக மகேந்திர சிங் தோனி திகழ்ந்தார்’ என புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன், ‘தேசத்தில் பெண்களுக்கு சமமாக உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என பெண்கள் குறித்த கருத்து ஒன்றையும் கோலி பதிவிட்டுள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்