காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஆறு வயது சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாரிக்கண்ணு என்பவர் பழுதான காரை சாலையோரம் நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்கம் மோதியதில், கார் ஆத்தூர் ஏரியில் மூழ்கியது.
காரில் அமர்ந்திருந்த ஆறு வயது சிறுமி இளம்பருதி உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராதிகா, பிரபாவதி ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!