மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
தானேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாடகை காரில் தனது இல்லத்திற்கு சென்றுள்ளார். அந்த வாகனத்தில் ஏற்கனவே ஒரு நபர் இருந்துள்ளார். கார் அந்த பெண் செல்ல வேண்டிய தடத்தில் செல்லாமல் மாற்று வழியில் சென்றுள்ளது. இதனை அறிந்த அந்த பெண் தனியார் கார் நிறுவனத்திற்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த மற்றொரு நபரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் கார் பயணம் செய்த தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சோதனை செய்தனர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுரேஷ், உமேஷ் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வாடகை கார் நிறுவனம் தரப்பில் தெரிவித்ததாவது, இச்சம்பவத்திற்கு தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கைது செய்யப்பட்டுள்ள நபர் பணம் கையாடல் செய்த புகாரில் தங்கள் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide