பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற விராட்-அனுஷ்கா ஜோடி

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற விராட்-அனுஷ்கா ஜோடி
பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற விராட்-அனுஷ்கா ஜோடி

விராட் கோலி-அனுஷ்கா ஜோடி பிரதமர் நரேந்திர மோடியை சந்திந்து வாழ்த்து பெற்றுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்காவின் திருமணம் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலி நாட்டில் நடைபெற்றது. கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் திடீரென இந்த திருமணம் நடைபெற்றது. கோலி-அனுஷ்கா ஜோடியின் திருமணம் மற்றும் ஹனிமூன் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி டெல்லியிலும், டிசம்பர் 26-ம் தேதி மும்பையிலும் இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விராட் கோலி-அனுஷ்கா ஜோடி பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். பிரதமர் அலுவலக ட்விட்டரில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்த படத்தை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், விராட் கோலி-அனுஷ்கா ஜோடியை மோடி வாழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com