ஓகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை வரவிருக்கிறார்.
புயல் பாதித்த பகுதிகளின் சேதத்தை பார்வையிடும் பிரதமர், மீனவர்களையும், விவசாயிகளையும் நேரில் சந்திக்க உள்ளார். இதற்காக தனி விமானத்தில் முதலில் லட்சத்தீவு செல்லும் பிரதமர், அங்கு அகாதி, கவரெட்டி பகுதிகளுக்குச் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதமர்,. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர்.
கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஓகி பாதிப்புகள் குறித்து விவாதித்தபின், அரசு விருந்தினர் மாளிகையில், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து பேசும் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார். ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் 88 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஏராளமானோரை காணவில்லை. இதற்கிடையே தமிழகத்திற்கு பேரிடர் கால நிவாரண நிதியின் 2 ஆவது தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. 561 கோடி ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசுவிடுவித்துள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்