ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு : ஹெச்‌ராஜா

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு : ஹெச்‌ராஜா
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு : ஹெச்‌ராஜா

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இரண்டாவது முறையாக ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சனையால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாகையில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ஆர்.கே.நகர் தேர்தலில் திருமாவளனுடன் கூட்டணி அமைத்து திமுக களமிறங்கினால், கடந்த 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணிக்கு ஏற்பட்ட அதே துயரம் தான் மீண்டும் ஏற்படும் என்றார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இரண்டாவது முறையாக ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com