ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என இசை அமைப்பாளர் கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ஆர்.கே.நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் தான் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதனால் இந்த முறையும் அவர் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக கரு.நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் போட்டியிட மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தில் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் போட்டியிடாததற்கு வேறு ஏதும் காரணங்கள் இல்லை எனவும் கங்கை அமரன் கூறியுள்ளார். யார் நல்லது செய்வார்கள் என யோசித்து பொதுமக்கள் தங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!