மூதாட்டியின் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானேவின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஹானே, அவரின் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக கொங்கண் பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்ற காரை, ரஹானேவின் தந்தை மதுகர் ஓட்டியுள்ளார். அவர்களின் கார் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி மீது மோதி உள்ளது.
இந்த விபத்தில் 67 வயதாகும் ஆஷா என்ற மூதாட்டி பலத்த காயமடைந்துள்ளார். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காகல் போலீசார், விபத்தை ஏற்படுத்திய மதுகரை கைது செய்துள்ளனர். மதுகர் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?