வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ காலடி வைத்த பிறகு, அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சந்தையில் இயங்கி வரும் பல முன்னணி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள விலை குறைப்பு, அதிகப்படியான சலுகைகள் என அனைத்தையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலையை குறைத்துள்ளது. இதுவரை ரூ.1500-க்கு விற்கப்பட்டு வந்த ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50 சதவீதம் விலை குறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்கள், டேட்டா பேக், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் என அனைத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்பாட்டிலும் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஜியோவின் 4ஜி ஹார்ஸ்பாட் ரூ.951-க்கு விற்பனையானது, அதனைத் தொடர்ந்து தற்போது ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிவேகத்துடன் செயல்படும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்டில் 10 டிவைஸ்களை இணைக்கலாம் எனவும், முழுவதுமாக சார்ஜ் செய்த பின்பு, 6 மணி நேரம் வரை பேட்டரி எந்தவித பிரச்னையும் இன்றி இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெலின் இந்த 4ஜி ஹாட்ஸ்பாட்டை மற்ற நிறுவனங்களான வோடோஃபோன் மற்றும் ஜியோவுடன் ஒப்பிட்டு பார்த்தால், ரூ.999-க்கு விற்பனையாகி வரும் ஜியோ ஹாட்ஸ்பாட்டில் 10 டிவைஸ்களை இணைக்கலாம். அதனுடன் மைக்ரோ எஸ்டி ஸ்டொரேஜ் மற்றும் 2,300 பேட்டரி சேவையில் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.1,950-க்கு விற்பனையாகும் வோட்ஃபோனின் 4ஜி ஹாட்ஸ்பாட்டில் 15 டிவைஸ்களை இணைக்கமுடியும். 34 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1,800 மெகா பேட்டரில் இயங்குகிறது.
Loading More post
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?